பள்ளிக்கு அரை நாள் கூட போக வேண்டாம்
என்ற நினைப்பிலேயே தூக்கம் வருவதினால் அல்ல...
ஏனோ அன்று மட்டும் சனியனே எந்த்திரி
என்ற வாசகம் கேளாமல் எந்திரிபதால் அல்ல...
அன்று மட்டும் என் தந்தையை முழு நாள்
முழுவதும் வீட்டிலயே பார்ப்பதினால் மட்டும் அல்ல...
கிழமையில் ஞாயிறு வரம்.
பல் பிரஷ் தேயும் வரை தேய்த்து..
ரொம்ப நேரம் குளித்து..
காலையில் டிவி ரிமோட் சண்டை இல்லாமல்..
சினிமா பார்ப்பதினால் மட்டும் அல்ல..
கிழமையில் ஞாயிறு வரம்.
அன்று என் கையில் ருவாய் பத்து வரும்
10 அடி தூரத்தில் என் வாத்தியாரின் கடை
என் வேலை 4 முட்டை வாங்க...
சில்லறைக்காக பப்புல் கம் வருவதினால் அல்ல..
கிழமையில் ஞாயிறு வரம்.
அம்மா அன்று மட்டும் சமையல் அறையிலே இருப்பதினால் அல்ல..
பிரியாணி எல்லாம் வராது
வெறும் சாதம் தான் வரும்
நான் வாங்கிய முட்டை...
முட்டை குழம்பாய் உருமாறி வீடே
உன்ன போவதினால் அல்ல....
கிழமையில் ஞாயிறு வரம்
மணி 1 :30
இந்த மணியில்
சாதம் தட்டில் இருக்கும்
பக்கத்தில் நீர் இருக்கும்
முட்டை குழம்பு சாதத்தில் இருக்கும்
அம்மா அப்பா தங்கை எதிரில் இருப்பர் இருந்தும் அன்று...
என் மணம் தட்டில் வைக்க வேண்டிய
ஐட்டத்தை Hot boxஐ துறந்து
அப்பா பரிமாறும் நொடிக்குத் தான்.
பாவம் கோழிக்குத் தான்...
அந்த நாள் வரம் அல்ல சாபம்.
-SP
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக