வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

கோவில்

                              Monday காலையில்  உதயம்  ஆனது  டிக்கெட்  போட்டு  ஊருக்கு  போகணும்  என்று..ட்ரெயின்  டிக்கெட்  எனக்கு  சாதகமாக  2 டிக்கெட்  availability காட்ட ...எனக்கும்  என்  மனைவிக்கும்   போட்டு  விட்டேன்  .... அவளிடம்  கேட்காமலேயே  ...மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு சென்றேன்  மனைவி  வரும்  முன்  சமைத்தும்  வைத்தேன் ....ஆச்சிரியமாக பார்த்தால்  ....இரவு  தூங்கும்  முன்  சொன்னேன் ....சொன்னதும்  பதறினால்    .."முடியவே  முடியாது  ...ரேவதியோட குழந்தைக்கு பர்த்டே  பார்ட்டி  இருக்கு ...கொன்னே  போட்டுருவா" என்றால்   ...மேலும்  பேசாமல்  தூங்கி விட்டோம்  ....Friday morning நி  வரணும்னு நினைக்குறேன் அப்புறம் உன் இஷ்டம் ...நான்  கிளம்பறேன் " என்றேன்  .. "சான்சே  இல்லை ....நீங்க  போங்க ...நான்  பார்த்துக்குறேன் "..."ok fine ...freea இருந்தா கால்  பண்ணு  .enjoy."...என்று  சொல்லி  விட்டு ....கடைசி  நிமிடம்  மணம்  மாறக்கூடும்  என்பதால்  அவள்  டிக்கெட் cancel செய்யாமலே இருந்தேன்  but வரல  . தனியாக  கிளம்பினேன்  return டிக்கெட் போடாமலேயே

திருநெல்வேலியில் இறங்கி  ...ஆட்டோகார்கள் ..."அண்ணே வெயில் மண்டைய பிளக்குது பேசாம ஆட்டோல வாங்க " "HighGround 120"..."அண்ணே சொந்த ஊருகாரன் 100   ஓகே " என்று பேரம் பேசி... ஆட்டோ  பிடித்து  சென்றேன் ....ஆட்டோவில்  போகும்  போது .."RMKV shift ஆயிருச்சு"  ... "பார்வதி  தியேட்டர்  மூடிட்டாங்க"  என்று  என்  ஊருக்கே  எனக்கே  அறிமுகம்  படுத்த கூணியே போனேன்  ...நடந்து  போகவே  விரும்பி  2km துரத்தில்  இறங்கி  நடந்தேன்  ...போகும்  வழியில்  பல  முகங்கள்  புதிதாய்  இருந்தாலும்  வெகு  சிலர்  என்னை  மறக்காமல்  இருக்க  ...அதில்  சிலரை   நான்  மறக்காமல்  இருந்தேன்  ....  "உன்  கல்யாணத்துல  பார்த்தது  அவங்க  எப்படி  இருக்காங்க?   ..அவங்க  வரலையா?"  ... என்று  அன்பாக  விசாரிக்க   ..."இல்லை  இல்லை   நான்  ஒரு  சின்ன  வேலையா  வந்தேன்"  என்றேன் ..."என்ன   தம்பி  இங்க  நம்ம  ஊருல  இருக்குறத  விட்டுட்டு  கன்னடகாரங்க  நடுவுல   இங்கிலீஷ்  பேசிட்டு  வாழனுமா?? ..சரி  தம்பி  நாளைக்கு  கடை பக்கம் வாங்க" என்று வரவேற்க... "கடை எங்க ?".. "நமக்கு என்ன தம்பி அதே இடம் தான் .." என்று விடைபெற்றார்  ...பள்ளி  பருவத்தில் மூடி  வெட்டி  என்னை  அழகு  ஆக்கியவர் ....அவர் தான் எனக்கு என் மீசை வளராத போதே வளர ஆசை ஏற்படுத்தியவர் ....

என்  தெரு  வழக்கம்  போல  அமைதியாய்   இருக்க  ....பூட்டை  திறந்து   உள்ளே  சென்றேன் ..எப்பொழதும்   நான்  வரும்  நேரத்தில்  கதவு  திறந்தே  இருக்கும்  ...செருப்பு  இடும்   இடத்தில  கூட . தூங்கி  இருக்கிறேன் .... இப்பொழுது   வீடு  முழுதும்  குப்பை ....வீட்டை  துய்மை   படுத்தினேன் . .... பக்கத்து  வீட்டுகார அண்ணன் நான்  வர  வேண்டும்  என்று  எதிர்பார்த்து  இருக்கிறார்  போல ....

"தம்பி  நல்லா   இருக்கீங்களா .....என்ன   தம்பி  பேசாம  இங்க  வந்துரங்க " என்றார்  " இல்லேன்னா  நான்  படிச்ச   படிப்புக்கு  இங்க  இருந்தா  ஒத்து  வராது " என்றேன்  ..."உங்க அப்பா  அம்மா  இருக்கும்  போது  வீடு  நல்லா  இருந்துச்சு   இப்படி  பாழடைய  போடாதிங்க உங்களுக்கு  ஆகாதுன்னு சொல்லுவாங்க ..பேசாம  வீடு  நல்லவிலை  சொன்னேங்கான நானே  வாங்கிக்கிறேன் " என்றார்  ....

தூக்கி  வாறி   போட்டது  ..."நீங்க  சொன்னத நான்  எங்க  அண்ணன்கிட்ட  போன  மாசம்  பேசினேன் '..".அப்பிடியா  oh விக்க  தான்  ஊருக்கு  வந்திங்களா  ...எவ்வளவுக்கு பேசி  இருக்கீங்க ? நான்  வேணும்னா  இப்போதைய  விலையோட  ஒரு  லட்சம்  அதிகம்  தரேன்  ...தெரிஞ்சவங்ககிட்ட  கூடுங்க ...தெரியாதவன்  கிட்ட  கொடுத்து  அவன்  apartment கெட்டி இருக்குற தண்ணி  எல்லாம் உறுஞ்சுருவங்க " என்று  சொல்லிக்கொண்டே  போனார் .  இடையில்  மறித்து   ...."இல்லை  எங்க  அண்ணன்  கொடுக்கவே   கூடாதுன்னு  சொல்லிட்டான்" என்றேன் ..... " அவருக்கு  இங்க  இருக்குற  நிலைமை  புரியல ....நானே  அவர்  கிட்ட  பேசுறேன் " என்றவாறு  நம்பர்  வாங்கிவிட்டார்  ...

எதிரே  இருந்த  வீடுகள்  apartment ஆகி  விட்டதை  உணர்ந்தேன்  ....சுற்றி  புதுமுகங்கள் .. Team பிரித்து  கிரிக்கெட்  கூட  ஆடி  இருக்கிறோம்  என்  வயது  கூட்டம்   இன்று  யாருமே  இல்லை  ...அவர்கள்  குடும்பமும்  வெளி ஏறி  விட்டதை  உணர்ந்தேன்   சிலர்  உலகத்தை  விட்டே  வெளி  ஏறி  விட்டார்கள்    வெகுசிலர்  கோவில்  நாடி  செல்லும்  வயதில்  இருந்தனர்  ...சில  பழைய  முகமோ  கழுகு  பார்வை  கொண்ட  முகங்கள் ... நாம்  என்று  மனம் மாறுவோம்  என்று எதிர் பார்க்கும் வியாபாரிகள் .... இன்னும்  சிலர்  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லா  முகங்கள்

சுத்தம்  செஞ்சு   ... பல  முகங்களுக்கு   தன்  முகத்தை  காட்டி  பொய்யாக  சிரித்து ... எத்தனை  முறை  சொன்னாலும்  என்னை  அழகு  ஆக்கிய  சிகை  அலங்கார  அண்ணனை ஞாபகத்தில் வைக்க   துளிகூட  அவசியமில்லா   மனித முகங்கள்  ..இது போன்ற  காரணத்தால்  தான்  என்னமோ  பிடிக்காமல்  ஊருலயே  இருந்துவிட்டால் என் மனைவி   ... ரேவதியை சில நேரம் திட்டி இருக்கிறாள் இருந்தும் அவள் குழந்தைக்கு பிறந்த தின பார்ட்டி முக்கியம் என்றால் ...

புருஷன்க்காரனக்கு  கால்செய்ய   மணம்  தோன்றிவிட்டது  போல .... என்  செல்  பேசி  துடித்த போது   ....எடுத்தேன்  ..." என்ன  உங்க  லவ்வர் பார்க்க  போகலயா ?"... "என்ன ?".."ஆமா  அவளை  பார்க்க  தானே  என்னை  விட்டுட்டு  போனிங்க ....for your information அவளுக்கு  நம்ம  பொன்னைவிட  4 வயசு  மூப்புலை  ஒரு  பொண்ணு  இருக்கா   so stop ur dreams ".... உன்னை  நான்  விட்டுட்டு  வந்தேனா  இல்லை  நான்  எக்கேடு  போன என்ன  ரேவதியின் குழந்தை bday  பார்ட்டி தான்  முக்கியம்  சொன்னேல  எப்படி  போகுது  bday "....
"fyi bday Sunday ...இப்போ  sat தான்  ஊருக்கு  போன நேரம்  காலம்  தெரியாதா ???...அங்க  Tim என்ன  morning 8 தானே ... Us la குளிரா ???".... "எங்க  ஊரு  Us  இல்லை  சுற்றி  பார்க்க  ஒன்னும்  இல்லை  ஆனா   நான்  சந்தோசமா  இருக்க  நிறைய  இருக்கு .. காலேஜ்  lecturer  ku   எத்தனை   தடவ  lecture எடுத்தாலும்  புரியாதே  .."செண்டிமெண்ட்  ராமானுஜம் சரி  காலையில  ரேவதிக்கிட்ட  பேசினேன்  வரும்  போது  உங்க  ஊருல  ஒரே  famous அல்வா  ஒரேஒரு   கிலோ  வாங்கிட்டு  வா "...."   சரவணன்  மீனாட்சி  பார்த்துட்டு  படுத்து   தூங்கு   எனக்கு  தோணுச்சுனா  வாங்குறேன் "...."இப்போ   என்ன  night show வா ...continue continue "...."இல்லை இல்லை டைம் இருக்குலே "

"அப்போ ...என்ன  குடும்ப  மலர்  கவிதை  படிச்சாச்சா  ..இல்லை இனிமேல் தானா?? ...ஒரு தடவையாவது  இங்க  கொண்டு  வந்தா  என்ன ...நான் படிச்சு நல்லா இருந்தா பேசாம ஒரு கவிதை புக்  போட்ட என்ன ??  ....அதுல  என்ன  இருக்கு  பொண்டடிகிட்ட உங்க  முன்னால்  so called காதலி  &காதல்  பத்தியே  சொல்லியாச்சு   but அந்த  குடும்ப  மலர்  diary காட்டமட்டேன்னு y telling ??.... பேசாம  காதலிச்ச உங்க  lover  கிட்ட  சத்யம்  பண்ணுநீங்களா  யாரு  கிட்டையும்  காட்டமட்டேன்னு ?    .....அதுக்கு  வாயுப்பே  இல்லையே ....பேசாதவ  கிட்ட  சத்தியம் எல்லாம் chance இல்லை ........ " இப்போ  உனக்கு  போர்  அடிச்சா  i can't help".... "நினைச்சேன் Sirக்கு  கோபம் வந்த்ருக்கும்னு ,,,ஓகே ஓகே  கூல் ,,,சிதம்பர ரகசியம் என்றும் ரகசியம் தான் "  ..."இப்போ என்ன பரோட்டா வா?? "....."ofcourse ok leaving bye"

கை ஏந்தி பவன் பரோட்டா, Night show Bombay தியேட்டரில் 10ருவை  டிக்கெட்டில் மேனேஜர்  குடும்பஸ்த்தன்   அப்பன்  என்றது  எல்லாம்   மறந்து  விசில்  அடித்து  பார்த்தேன்  மொக்க படம்  என்று  தெரிந்தும் ....    

ஞாயிற்றுக்கிழமை  வேப்பிலை  கொழுந்து  சாப்பிட்டு   எண்ணெய்  தேய்த்து  தொட்டியில்  குளியல் மொட்டை  மாடியில்  படிக்கிறேன்  என்ற  போர்வையில்  சைட்  முதல்  காதலி  நினைத்து  கவிதை  முதல்  dance வரை  ஆடியது  ஞாபகம் வர... நான் அழகன் என்று என்னையே நம்பவைத்த ஒரே இடத்துக்கு சென்றேன் ...முடிவெட்டும் கடைக்கு சென்றேன்.. இந்த நேரம் கூட்டமாய் இருக்கும் என தெரிந்து அந்த நேரமே போனேன். மக்கள் மாறவில்லை என கணக்கும் தவறாய் போனது இல்லை...கூட்டமாய் தான் இருந்தது ...  ஊர் நடப்பை ஒரு நாள் சண்டே முடிவெட்டி கொள்ளும் இடத்தில தெரிந்து விடலாம்...தெரிந்து கொண்டேன் சிலவற்றை ..மதியம்  உண்ணாமல்  தூங்க  ஆரம்பித்தேன்  கட்டில்  இல்லை தலையணை  இல்லை  தூக்கம்  நடுவில்  current சென்றது  இருந்தும்  தூக்கம் ....எழுந்த  நொடி  நிம்மதியாய்  இருந்தேன்  ... 5 நிமிடம்  எதும்  பண்ணாமல்   அமைதியா  இருந்தேன் ...சாயங்காலம்  அல்வா  வாங்கி  கொண்டு  ஊரை விட்டு கிளம்ப தயாரானேன்...கண்கள் எதையோ தேடியது ...யாரையோ எதிர்பார்த்தது ....அன்று கண்கள் சுற்றி அடித்து தேடியது போல....பேருந்துக்குள் கடைசி ஆளாய் ஏறினேன்.

 காலை  6 மணி  பரபரப்பாய்   மக்கள் பெங்களூர்'ல்   ... அதில்  நானும்  ஒன்றாய்  சேர்ந்து  ...வீட்டுக்கு  சென்றேன்  யாரும்  இல்லை  ...மனைவி ஆபீஸ்  சென்றால்  குழந்தை  play ஸ்கூலில்  ....சாவி  இருந்தால்  குளித்துவிட்டு  ஆபீஸ்  சென்றேன்  ...  monday காலையிலேயே   எல்லாரும்  வேலை  பார்க்காமல்  Vila  cheap ஆக  இருக்க  அதை  வாங்க  ஆலோசனை செய்ய  ..."பொண்ண  பெத்தவனே  என்ன   Vila ஒகேவா  1.1 தான் மேனேஜர் நீயா வாங்கலேனா  நாங்க எல்லாம் எங்க போவோம் "... "சொல்லிட்ட்டேல கண்டிப்பா வாங்கலாம் " என்றேன்  ....

மாலையில்  மனைவி  வந்தால்  விவரம்  கேட்டாள்...அதே புராணம் மீண்டும் சொன்னேன்  அவள் புதிதாய் கேட்பது போல கேட்டாள் ,,,,
அல்வா  மட்டும்  ஆபீஸ்க்கு    இவ்வளவு வீட்டுக்கு இவ்வளவு  என்று  பிரித்தால்  ....  இரவில்  Villa மேட்டர்  பற்றி  சொன்னேன்  ..."Ho  superb  Villa will b fantastic ...apartment போர் ... கண்டிப்பா  வாங்கலாம் "  என்று .... கேட்டு  கொண்டு  இருந்த  குழந்தை  கேட்டால்  "புது  வீடா !! .... அங்க   போயிருவோமா  ??".... "இல்லை   இது  தான்  உனக்கும் ஸ்கூல்  பக்கம்  ஆபீசும்  எங்களுக்கும்  பக்கம் ....அது  லீவ்  டைம்லே..." என்று விளக்கம் அளித்து  தூங்கினோம்.

எனக்கு மட்டும், இன்றைய  நிலவரபடி பெங்களூர்இல்   மட்டும்  1 வீடு  ...இப்போ ஒரூ  Villa சேர்த்தாச்சு  .... சத்தியமா  நாளை என்  ஒரே  குழந்தைக்கு  தெரியாது  தெய்வம் வாழ்வது எந்த கோவிலில் என்று ...

====
By
SP
===




Moral and Inspired From :


'அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசாதீங்க ... ஊரு எல்லாம் இந்த மாதிரி நிறைய சாமி இருக்கு "  - கமலஹாசன்

"நிறைய கோவிலும் இருக்கு "  -SP