செவ்வாய், ஜூன் 22, 2021

கலங்காதிரு என் மனமே

கண்ணே கண்மணியே
காலை கண் விழிப்பேன்
கலங்காதிரு கண்னே,
காலை கண் முழிக்க மறந்துவிட்டால்,
மருகாதே,
மறவாதே,
நி கண் தூங்கும் ஒவ்வொரு வேளையிலும்,
மறவாமல் நான் வருவேன்,
பேசாத கதை எல்லாம் சொல்லி போவேன்,
நனையாத நிலத்தை நனைக்கும் மழை போல,  
மின்னல்கள் தாக்கினாலும்,
இடிகள் இடித்தாலும், 
உறங்காத உன் மனதை உறங்க வைப்பேண்டி,
இது சத்தியமடி,
இது நி என்னுள் இருக்கும் என் மேல் சத்தியமடி.

கண் விழித்திடத் தான் ஆசை,
உன் கை கோர்த்து நடந்திடத் தான் ஆசை
ஆசைப்படவதை எல்லாம் செய்திடத் தான் ஆசை,
ஆசை மகனை பார்த்துவிடத் தான் ஆசை,
உன் முன்னே,
உன் கண்முன்னே,
மன்னை விட்டுபோய்விடத் தான் ஆசை,
நி மரித்து
நான் வாழவாழ்நாள் ஒன்று வேண்டாம்,
அந்த நாழிகை ஒன்றும் வேண்டாம்.

எமா,
பக்கத்தில் படுக்கையில் இருப்பவள் என்னவள் தான்,
நான் அவளுக்குள் இருப்பதால் அவளிடம் செல்லாதே,
அது நான் அல்ல,
என்னுள் அவள் இருப்பதால்,
நான் யார் என்று குழம்பி போகாதே,
நான் எங்கே என்று தேடி தொலையாதே,
நி பூவா தலையா போட்டு அள்ளி செல்லாதே
பூ அவள் , விட்டு விடு,
போய் அவளிடம் சொல்லி விடு,
நி அழைத்து போவது,
என் உடல் மட்டும் தான்,
மணம் என்றும் போல் சுற்றி திரியும் ,
அவளிடம் மட்டும் தான்.

என்னவளே போய் வருகிறேன்,
போய் பேயாக வருகிறேன்,
நி என்னுடன் 100 வருடம் வாழ வேண்டி,
வரம் கொடுக்காமல் போன,
கடவுளாக மட்டும் வர மாட்டேன்,
கண்ணீர் கடலில் நீந்த வைக்க மாட்டேன்,
காற்றில் கோலம் உன்னை வரைய விட மாட்டேன்,
கால போக்கில் காற்றில் கரைய மாட்டேன்,
நீருக்குள் உப்பாய் கரைந்து விடுவேன்,
உனக்குள் கலந்து விட்டதால்,
கலங்காதிரு என் மனமே.

-SP

விவேக் கம் ப்லீஸ்


“குப்பை தொட்டியில் கட்டு சட்னியுடன் இட்லி வீச” 
வேண்டும் என்று மனிதாபிமானம் கற்ப்பித்தவனே,
“Don’t worry be happy”என்று பாடம் கற்ப்பித்தவனே,
“Awaas anjing”யிடம் உசாரா இருக்க சொன்னவனே ,
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா” 
என்று மரம் நட்டவனே,
எங்களுக்கு “கோபம் வந்தால் தமிழ் வரும்” என்று தெரிந்தவனே,
“லெமுரியா கண்டத்தில், எங்கள் ,
குடும்ப பாங்கான பெண்களை தேட” சொன்னவனே,
என் விட்டில் Bore போட்டால் US காரன்
 வர கூடும்  என்று சொன்னவனே,
“Take DIVERSION” மூலம் திருப்பதி போனவனே,
“ஒரு எலும்பச்சிம் பழம் மூலம் லாரி” ஒடுமா என்று சொன்னவனே,
“சென்னை போடா வென்னை”
 சொல்லகூடும் என்று சொன்னவனே,

“Retire ஆன பிறகு எதற்கு watch” என்று உன்மையே சொன்னவேனே,
“Passport size photo விற்கு shorts போட்டு”
கூட போகலாம் என்று Trend இருக்க  சொன்னவனே,
ஜாதி இல்லை என சொல்லிவிட்டு, 
"கோனார் NOTES" எதற்கு என்று கேட்டவனே,
Gym போனாலும் காது வளராது என்று உன்மை சொன்னவனே,
Mind voice என்று நினைத்து நாம் உலர கூடும் என்று சொன்னவனே,
“எண்ட State கேரளா ஆனோ” 
என்று தமிழனுக்கு
கேரளா பெண்கள் பிடிக்கும் என்று உன்மை சொன்னவனே,
“எப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்று 
பழைய photo பார்த்து நம்மலை நாமே சொன்ன வைத்தவேனே,
“இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்” 
சொல்லியதால் தானா இன்று உனக்கு பால் ஆனதா ,
“பட்டையா போட்டாயா ? நாமத்தை ? போட்டாயா ” 
யாரும் உன்னை காப்பற்றவில்லேயே.

#RIPVivek
#SP