உன் நினைவு தாங்கி தான் ,என் நாட்களும் நகருது,
உன் பெயரை தாங்கி தான் ,என் செல்லும் இருக்குது,
ஏதோ ஏதோ பேச தான் , எல்லா சொல்லும் நினைக்குது,
எந்த சொல்லை சொல்லி தான் ,
என்னை மீண்டும் அறிமுகம் செய்ய??
காலை வணக்கத்துடன் ஆரம்பிக்கவா??
மன்னிப்புடன் ஆரம்பிக்கவா??
நான் தான் , மறந்தாயா நி??
முன்னால் நன்பன் என சொல்லவா??
நான் தான் , நி மறக்க முயல்கிற,
இண்னால் எதிரி என சொல்லிவிடவா??
என்னலாமோ எழுதி ,
வேண்டாம் என அழித்தேன் ,
இலக்கண பிழையினால் அல்ல ,
தீபாவளி அன்று அனுப்பின செய்திக்கே,
இன்றும் பதில் வராமல் இருக்க ,
இன்று எதற்குப்பா ?? என்னை
நானே கேட்டு கொண்டேன் ,
நி இல்லாமல்
கணவு இல்லை,கற்பனை இல்லை,
சண்டை இல்லை,சிரிப்பு இல்லை,
ஏன் நி இல்லாமல் நானே இல்லை.
நேற்று போல இன்று இல்லை, என அறிந்தும்
உன் நிஜத்தில் நான் இல்லை, என புரிந்தும்
ஏனோ.. பேச தோனுது,
அறிவுக்கு எட்டினது ,
மனசுக்கு எட்டவில்லை,
பள்ளி குழந்தை போல,
போன தீபாவளி மீண்டும் வர ஏங்குது
வாழ்த்துக்கு வாழ்த்து வருமானு காத்திருக்கிறேன் …
அது வரை எழுதி எழுதி அழிக்கிறேன்…
----
இவன் SP
-----